articles

img

ஐந்து மாநில தேர்தல் : ஒரு பார்வை

ஐ ந்து மாநிலங்களின் தேர்தல் தேதிகள்  அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகளையும் தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. மத்தியப்பிர தேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7, 17, 25, 30 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி உள்ளிட்ட இதர விவரங்களையும் தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்த மாநிலங்களில் ஒன்று  தென்னிந்தி யாவிலும், மூன்று மத்திய இந்தியாவில் இந்தி பேசுகிற பகுதியிலும் மற்றும் ஒரு மாநிலம் இந்தியாவின் கிழக்கு எல்லையிலும் உள்ளன.

இந்த ஐந்து மாநிலங்களுள் இரண்டில் இப்போது  காங்கிரசும், ஒன்றில் மத்திய ஆளும் கட்சியாகிய பாஜ கவும், மற்றும் இரண்டில் மாநிலக் கட்சிகளாகிய பிஆர்எஸ்-சும், எம்என்எஃப் என்ற கட்சியும் அதிகாரத்தில் உள்ளன. முன்பு மத்தியப்பிரதேசத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. ஆனால், கட்சித் தாவல் காரணமாக பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு இருந்தது. 

தெலுங்கானா

தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்நின்று  செயல்பட்ட காங்கிரஸ் தலைவர் கே.சந்திரசேகரராவ் (கேசிஆர்)  தெலுங்கானா மாநிலம் உருவானதற்குப் பின்னர்  நடைபெற்ற தேர்தல் சமயத்தில் அதிகார ஆசையினால் தனியாக ஒரு கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது, பாரத் ராஷ்டிரிய சமிதி) ஆரம்பித்தார். அந்த மாநிலத்தில் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களும் அனுதாபிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு பெரும்பான்மை பெற்றனர். கேசி ஆர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார்.  கடந்த 2014, 2018 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்த லிலும் பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) மீண்டும் பெரும்பான்மை பெற்றது. 2013-லும், 2018-லுமாக இரண்டுமுறை காங்கிரஸ் தோல்வியுற்றாலும் தெலுங்கானாவில் காங்கிரஸ் வலுவான கட்சியாகும். அண்மைக் காலத்தில் நடைபெற்ற மாநில உப தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியுற்றாலும் கர்நாட கத்தில் அது மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு  வந்தது. இது, தெலுங்கானாவிலும் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான தன்னம்பிக்கையை காங்கிர சுக்கு தந்துள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஆனால், அதனால் மக்களிடம் நல்ல அரசாங்கமாகக் காட்டிக் கொள்ளவோ, மக்களிடம் நம்பிக்கையை உயர்த்தவோ முடியவில்லை. அது மக்களிடம் ஆட்சிக்கு எதிரான உணர்வின் வலையில் சிக்கி யுள்ளது. இது, தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குச் சாதகமான அம்சமாகும். 

முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.பிரவீண்குமார் தெலுங்கானாவில் பகுஜன சமாஜ் கட்சிக்கு (பிஎஸ்பி) தலைமை வகித்துப் போட்டி யிடுவதால் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களின் வாக்குகளில் ஒருபகுதியை பிஆர்எஸ்-சும், காங்கிரசும் இழக்கலாம். அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு உள்ள செல்வாக்குக் காரண மாக ஒருபகுதி முஸ்லிம்களின் வாக்குகளை காங்கிரஸ் இழக்கலாம் என்ற நிலையும் உள்ளது. இருந்த போதிலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்ட ணிக்கு அகில இந்திய அளவில் உள்ள நல்ல செல்வாக்கு தெலுங்கானாவில் காங்கிரசுக்குச் சாதக மான அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மத்தியப்பிரதேசம்

2018 தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பாஜக 109 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சிறு  பெரும்பான்மையாக இருந்ததால் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடனும், சில சுயேச்சைகளின் ஆதரவுடனும் அமைச்சரவை அமைத்தார். தலைமைப் பதவியின் பேரால் கமல்நாத்துக்கும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு மிடையே போட்டி ஏற்பட்டது. தன்னை மத்தியத் தலைமையே ஆதரிக்காததால் கோபமடைந்த சிந்தியா பாஜக அளித்த ஆசை வாக்குறுதியை நம்பி பாஜகவின் ஆதரவாளராக ஆனதுடன், காங்கிரஸை விட்டும் வெளியேறிவிட்டார். அத்துடன் காங்கிரஸ் தனது சிறுபெரும்பான்மையையும் இழந்துவிட்டது. கட்சி தாவிச் சென்ற காங்கிரஸ்காரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு மத்தியப்பிரதேசத்தில் பாஜக அமைச்சரவை அமைத்தது. 

மத்தியப்பிரதேசத்தில் பாஜக 2003 முதல் அதிகாரத்தில் இருந்தது. 2018-இல் சட்டமன்றத்தில் அந்தக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. பிறகு 2020-இல் சிந்தியாவும் மற்றவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த துடன்தான் பாஜக மீண்டும் அங்கு அதிகாரத்திற்கு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக மத்தி யிலோ மாநிலத்திலோ பாஜக ஆட்சி மக்களின் விருப்ப த்திற்கு ஏற்றபடி இல்லை. அதனால், ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு அந்த மாநிலத்தில் வெளிப் படுகிறது. அதனால்தான் சில ஒன்றிய அமைச்சர் களை இந்தமுறை மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுவதற்கு பாஜக தலைமை நியமித்தது. மத்தியப்பிர தேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முதலில் வேட்பாளர்களை அறிவித்தது தாங்கள்தான் என்று, அதை ஒரு சாதனையாகச் சொல்லிக்கொள்கிறது பாஜக. அத்துடன், தனது ஒன்றிய அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்துள்ளது. தற்போதைய முத லமைச்சரை வைத்துக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது  என்பதைக் கண்டு தான் அந்த மாநிலத்தில் இந்த மாற்றத்தை மத்திய பாஜக தலைமை தீர்மானித்தது. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்கையில் மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக சாதகமாக உள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கை யில் காங்கிரசுக்குத்தான் அதிக மக்கள் செல்வாக்கு உள்ளது. அது பாஜகவுக்குப் பெரும் சவாலாக உள்ளது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நரேந்திர மோடிக்கு உள்ள செல்வாக்கைத்தான் சத்தீஸ்கரில் தாங்கள் வெற்றி பெறுவதற்கான முக்கிய  சக்தியாக பாஜக பார்க்கிறது. பூபேஷ் பாகேல் தலைமை யிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இருந்தது. விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வேலை யில்லாத இளைஞர்கள் ஆடு-மாடு  வைத்துள்ள வர்கள் ஆகியோர்க்கு பாகேல் அரசு நேரடியாக வழங்கி வந்த பலவிதமான நிதிஉதவி பெரும் வெற்றியை உண்டாக்கியது. ஆனால், அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் மோதல்தான் அந்தக் கட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அரசுக்கு எதிரான மக்களின் கோபம் அங்கு வலுவாக எழலாம் என்ற  எண் ணத்தில் பாஜக சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

சேவா ஆதிவாசி சமாஜ் என்ற ஆதிவாசிகள் கூட்டணி களத்தில் இறங்கியிருப்பதால் காங்கிரஸ் இதைவிடப் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. ஆதிவாசிகள் கூட்டணி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 29 பட்டியல் இனப்பிரிவுக்கான தொகுதி கள் உள்பட 50 தொகுதிகளில் போட்டியிடுவது என்று அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய சவால் ஆகும். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி 22 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அது காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்கலாம். சிலசமயம் இவையெல்லாம் போட்டிக் களத்தில் இருப்பது வாக்குகள் பலவழிகளில் சிதறி அது காங்கிரஸ்க்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை வழங்கலாம்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும் சவாலை  எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து தான் மிகப்பெரும் சவால். மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் திறமையான தலைவரும் ஆட்சி யாளரும் ஆவார். மருத்துவக் காப்பீடு, வேலை உறுதித் திட்டம், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு ஸ்மார்ட் ஃபோன், சமூகப் பாதுகாப்பு அலவன்ஸ் முதலான திட்டங்கள் மூலமாக அவர் தமது ஆட்சியைப் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக ஆக்கியுள்ளார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்ற காலம் முதல் முதலமைச்சர் பதவி மீது பெரும்  ஆசை கொண்டவர்தான் சச்சின் பைலட். அவருக்கு ராகுல் காந்தியுடன் நல்ல நட்பு உண்டு. ஆனால், அசோக் கெலாட்டுக்கு உள்ளது போன்ற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோ, நிர்வாகத் திறமையோ சச்சின் பைலட்டுக்கு இல்லை என்பது அவரது பாதுகாப்பாளராகச் சித்தரிக்கப்படுகிற ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அறியலாம். அத னால், கட்சிக்கும் ஆட்சிக்கும் பயனுள்ள, தலைமை வகிப்பதற்குத் திறமையுள்ள அசோக் கெலாட்டே முதலமைச்சர் பதவியில் தொடரட்டும் என்று காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இல்லை. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் நிலைமை மோசமாக உள்ளது. பொதுவாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காற்று பாஜகவுக்குச் சாதகமாக வீசாது  என்பதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. நன்றி: “சிந்தா” மலையாள வாரஇதழ் (15.10.2023) - தமிழில்: தி.வரதராசன்

தெலுங்கானாவைப் பொறுத்தவரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இல்லை. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் நிலைமை மோசமாக உள்ளது.